கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘பல்வகை சரக்குப் போக்குவரத்து, துறைமுக இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட இந்தியா உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால்

Posted On: 05 JUN 2025 5:24PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், ஒஸ்லோவில் நடைபெற்ற  நார்-ஷிப்பிங் கருத்தரங்கில்  கப்பல் போக்குவரத்து தொடர்பான இந்திய அமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். கப்பல் மற்றும் துறைமுக வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான இந்தியாவின் புதுமையான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வளர்ச்சியடைந்த தற்சார்பு பாரதம் என்ற  இலக்குகளை நோக்கி  முன்னேறி வருவதாக அவர் கூறினார். இதில் கடல்சார் துறையும் முக்கிய அம்சமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். துறைமுக உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், சரக்குப் போக்குவரத்து அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கும், இந்தியா பரந்த அளவிலான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், கிழக்கு கடல்சார் வழித்தடம், சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற உத்திசார் வழித்தடங்கள் கடல்சார் இணைப்பையும் விநியோகச் சங்கிலியையும் வலுப்படுத்தும் என அமைச்சர் எடுத்துரைத்தார்.

பல்வகை சரக்குப் போக்குவரத்து, துறைமுக இணைப்பு, வர்த்தக வசதிகளை மேம்படுத்தும் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றிற்காக இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடும் என்று அவர் கூறினார்.  கடல்சார் துறையில் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியான திட்டங்களை இந்தியா செயல்படுத்துவதாகவும் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

***

(Release ID: 2134220)

AD/TS/PLM/AG/DL


(Release ID: 2134320)
Read this release in: Hindi , English , Urdu