கலாசாரத்துறை அமைச்சகம்
புதுப்பிக்கப்பட்ட “அணுசக்தி மண்டபம்: நாட்டிற்கு சேவை செய்யும் அணுக்கள்” தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் திறக்கப்படவுள்ளது
Posted On:
04 JUN 2025 5:51PM by PIB Chennai
தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில், 2025 ஜூன் 5 அன்று நண்பகல் 12:30 மணிக்கு "அணுசக்தி மண்டபம்: நாட்டிற்கு சேவை செய்யும் அணுக்கள்" என்ற தலைப்பில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர காட்சியகம் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் இந்திய அணுசக்தி கழகத்தின் சிறந்த விஞ்ஞானியும் நிர்வாக இயக்குநருமான திரு பி.வி.எஸ். சேகர், இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு தலைவர் திரு உமேத் யாதவ் ஆகியோர் முக்கிய விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அருங்காட்சியக வல்லுநர்கள் முன்னிலையில் கலந்து கொள்வார்கள்.
2016-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த காட்சியகம், இப்போது அதிநவீன காட்சி தொழில்நுட்பங்கள், மக்களுக்கு உகந்த தொடர்புகள் மற்றும் மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களுடன் மாற்றப்பட்டுள்ளது.
7,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த காட்சியகத்தில் 56-க்கும் மேற்பட்ட உரையாடல் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்திற்கான தூய்மையான, நம்பகமான மற்றும் நிலையான மின்சார ஆதாரமாக அணுசக்தியின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், நாட்டின் அணுசக்தி பயணத்திற்கும், டாக்டர் ஹோமி ஜே. பாபா போன்ற முன்னோடிகளுக்கும் இந்த காட்சியகம் மரியாதை செலுத்துகிறது.
தேசிய அறிவியல் மையம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133872
***
AD/IR/KPG/DL
(Release ID: 2133896)