புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025 ஜூன் 5-6 ஆகிய நாட்களில் கொள்கை வகுப்பிற்காக மாற்று தரவு ஆதாரங்கள், முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த தேசிய பயிலரங்கு நடைபெற்றவுள்ளது

Posted On: 04 JUN 2025 3:13PM by PIB Chennai

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், நித்தி ஆயோக் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து, கொள்கை வகுப்பிற்கான மாற்று தரவு ஆதாரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான இரண்டு நாள் தேசிய பயிலரங்கை 2025 ஜூன் 5-6 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொள்கை வகுப்பிற்காக மொபைல் போன் தரவு, ஸ்கேனர் தரவு மற்றும் புவிசார் தரவு போன்ற மாற்று தரவு ஆதாரங்களைப் பயன்படுத்துவது கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் அத்தகைய தரவை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், கடந்த 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னணி தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

இந்தப் பயிலரங்கம், பங்குதாரர்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதையும், கொள்கை வகுப்பில் மாற்றுத் தரவு ஆதாரங்கள் மற்றும் முன்னணி  தொழில்நுட்பங்களின் சாத்தியமான பயன்பாடுகள் குறித்து ஆலோசிக்க ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சான்றுகள் சார்ந்த கொள்கை முடிவுகளுக்கான வழக்கமான தரவு ஆதாரங்களை சரியான நேரத்தில் கூடுதலாக வழங்குவதன் மூலம் நாட்டின் புள்ளிவிவர அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133774

----

AD/SM/SMB/IR/KPG/KR


(Release ID: 2133816)
Read this release in: English , Urdu , Hindi