அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்-இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் தேசிய அறிவுசார் சொத்து திருவிழா -2025
Posted On:
29 MAY 2025 6:12PM by PIB Chennai
இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்-இந்திய பெட்ரோலிய நிறுவனம், 2025 மே 29 அன்று தேசிய அறிவுசார் சொத்து திருவிழா 2025-ஐக் கொண்டாடியது. இது விடுதலையின் அமிர்தப் பெருவிழா முயற்சியின் ஒரு பகுதியாகும். இது முதன்முதலில் 2023 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்- இந்திய பெட்ரோலிய நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை குழும பொறுப்பாளர் டாக்டர் தீப்தி அகர்வால் தொடக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர் -இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹரேந்தர் சிங் பிஸ்ட் உரை நிகழ்த்தினார்.
புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் -புதுமை கண்டுபிடிப்புகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த டாக்டர் கபில் ஆர்யா, "அறிவுசார் சொத்துரிமைகளை உணருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இது காப்புரிமையின் அடிப்படையை எடுத்துரைத்தது. அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுடன் உரையாடல் அமர்வு நடைபெற்றது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறிவுசார் சொத்துரிமை குறித்த ஆன்லைன் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2132419
***
AD/TS/IR/AG/DL
(Release ID: 2132459)