எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எஃகு நிறுவனம், 2025 - ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்கான நிதிசார் முடிவுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட நிகர லாபத்தில் 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 29 MAY 2025 12:36PM by PIB Chennai

இந்திய எஃகு நிறுவனம் (செயில்), அதன் 2025 - ம் ஆண்டு மார்ச் 31 - ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் வருடாந்திர நிதிசார் முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

31.3.2025 அன்று முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டின் செயல்திறன் (தனித்தனி) சுருக்கமான பார்வை:

 

 

அலகு

4 - ம் காலாண்டு 23-24

3 - ம் காலாண்டு 24-25

4 - ம் காலாண்டு 24-25

கச்சா எஃகு உற்பத்தி

 மில்லியன் டன்

5.02

4.63

5.09

விற்பனை அளவு

 மில்லியன் டன்

4.56

4.45

5.33

செயல்பாடுகளிலிருந்து வருவாய்

 ரூபாய் கோடியில்

27,958

24,490

29,316

வட்டி, வரி, தேய்மானம், கடன்தீர்ப்புக்கு முந்தைய வருவாய்

 ரூபாய் கோடியில்

3,829

2,389

3,781

விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரிக்கு முந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

1,831

289

1,593

விதிவிலக்கான பொருட்கள்

 ரூபாய் கோடியில்

(502)

29

(29)

வரிக்கு முந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

1329

318

1564

வரிக்குப் பிந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

1011

126

1178

 

2024-25 நிதியாண்டின் செயல்திறன் (தனித்தனி) சுருக்கமான பார்வை:

 

 

அலகு

2023-24

2024-25

கச்சா எஃகு உற்பத்தி

 மில்லியன் டன்

19.24

19.17

விற்பனை அளவு

 மில்லியன் டன்

17.02

17.89

செயல்பாடுகளிலிருந்து வருவாய்

 ரூபாய் கோடியில்

1,05,375

1,02,478

வட்டி, வரி, தேய்மானம், கடன்தீர்ப்புக்கு முந்தைய வருவாய்

 ரூபாய் கோடியில்

12,280

11,764

விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரிக்கு முந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

4,529

3,321

விதிவிலக்கான பொருட்கள்

 ரூபாய் கோடியில்

(841)

(313)

வரிக்கு முந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

3,688

3,009

வரிக்குப் பிந்தைய லாபம்

 ரூபாய் கோடியில்

2,733

2,148

 

இந்த நிறுவனம் பங்கு ஒன்றிற்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ. 1.60 வழங்க முன்மொழிந்துள்ளது. (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ. 10), இது அந்த நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

"மாற்றமடைந்து வரும் வர்த்தகக் கொள்கைகள், இறக்குமதி சார்ந்த நடைமுறைகளால் வடிவமைக்கப்பட்டு, அதிகரித்து வரும் உலகளாவிய எஃகு உற்பத்தியில், இந்திய எஃகு நிறுவனம் (செயில்) தொடர்ந்து நீடித்தத்தன்மை மற்றும் உத்திசார் நடவடிக்கைகள் மூலம் தனது  செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது" என்று அந்நிறுவனத்தின்  தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. அமரேந்து பிரகாஷ் கூறினார். இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள நிதிசார் முடிவுகள், செயல்பாட்டுத் திறன், நீடித்த வளர்ச்சி, பங்குதாரர்களுக்கான மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார். சர்வதேசக் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி தொடர்பான அழுத்தங்களால் ஏற்படும் சவால்களுக்கு இடையே, தங்கள் நிறுவனத்தின் வலுவான செயல்திறன், அதன் நிலையை வலுப்படுத்தும் அதே வேளையில், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனையும் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார். அரசின்  கொள்கைகள், உள்நாட்டு எஃகு தேவையை பூர்த்தி செய்வதற்கு சாதகமாக உள்ளது என்றும், மேலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் போது, ​​தேசிய எஃகு கொள்கைக்கு ஏற்ப புத்தாக்கம், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் மேம்பட்ட நடவடிக்கைகள்,   எதிர்கால விரிவாக்கம் தொடர்பான திட்டமிடல் போன்றவற்றில் இந்திய எஃகு நிறுவனம் (செயில்கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132245

 

****************

AD/TS/SV/KPG/RR/DL


(Release ID: 2132438)
Read this release in: English , Urdu , Hindi