சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
'மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு' கருத்தரங்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய, அணுகக்கூடிய, உதவக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை வெளிப்படுத்தும்
Posted On:
29 MAY 2025 11:27AM by PIB Chennai
இந்திய செயற்கை மூட்டு உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையானது 2025 மே 30 அன்று பெங்களூருவில் "மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு" என்ற கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முன் முயற்சி, மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ளடக்கிய, அணுகக்கூடிய, உதவக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் குறித்து விவாதிக்க உதவும். இம்மாநாடு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலின் சிறப்பு உரையுடன் தொடங்கும். ஐஐடி தில்லி பேராசிரியர் பி.வி.எம். ராவ், அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக்கழக பேராசிரியர் வேணு கோவிந்தராஜு ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132229
***
AD/TS/IR/AG/RR
(Release ID: 2132242)