தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய இரண்டு வார குறுகிய கால ஆன்லைன் வழிப் பயிற்சி நிறைவு பெற்றது

Posted On: 27 MAY 2025 12:56PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய இரண்டு வார  ஆன்லைன் வழி குறுகிய கால பயிற்சித் திட்டம் நிறைவடைந்தது. இப்பயிற்சி 2025 மே 13, அன்று தொடங்கியது. 21 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு பிராந்தியங்களின் தொலைதூரப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 69 மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.  பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான இப்பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த  1,795 விண்ணப்பதாரர்களில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் திருமதி விஜய பாரதி சயானி, பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்களுக்கான இந்தப் பயிற்சியை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார், அதே நேரத்தில் அவர்கள் இரக்கத்தோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மனித உரிமைகள் என்பவை கண்ணியம், சமத்துவம், சுதந்திரம் தொடர்பானது என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் சமூக-பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், அச்சமின்றி, வாய்ப்புகளுக்கு சமமான அணுகலுடன், கண்ணியத்துடன் வாழ முடியும் என்பதை அவை உறுதி செய்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு சமீர் குமார், பயிற்சி குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். மனித உரிமை ஆணைய உயரதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளால் இதுவரை நடத்தப்பட்ட 35 அமர்வுகளில் மாணவர்கள் மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அறிந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131574   

****

AD/TS/IR/KPG/RJ/DL


(Release ID: 2131708)
Read this release in: English , Urdu , Hindi