திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய தொழில் பழகுநர் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் இளைஞர்களுக்கான உதவித் தொகையை 36 சதவீதம் உயர்த்த மத்திய தொழில்பழகுநர் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது
Posted On:
26 MAY 2025 6:03PM by PIB Chennai
தொழில் பழகுநர் பயிற்சியை மிகவும் மதிப்புமிக்கதாகவும், இந்திய இளைஞர்களுக்கு விருப்பம் உள்ளதாகவும் மாற்றும் வகையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி தலைமையில் நடைபெற்ற மத்திய தொழில்பழகுநர் கவுன்சில் கூட்டம், தேசிய தொழில் பழகுநர் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் இளைஞர்களுக்கான உதவித் தொகையை 36 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை காரணமாக உதவித் தொகையின் அளவு தற்போதுள்ள ரூ.5,000 என்பதிலிருந்து ரூ.9,000 ஆகவும், ரூ.6,800 – என்பதிலிருந்து, ரூ.12,300 ஆகவும் திருத்தி அமைக்கப்படும். பல்வேறு துறைகளில் கூடுதலான பயிற்சியாளர்களை ஈர்ப்பதும், இடைநிற்றலை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, தொழில் பழகுநர் பயிற்சி என்பது திறன் அளிப்பதற்கான நடைமுறை மட்டுமல்ல என்றும், கல்வி, தொழில்துறை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைக்கும் பாலமாகும் என்றும் கூறினார். ஒவ்வொரு இளைஞரும் அவரின் பின்னணியை பொருட்படுத்தாமல் அர்த்தமுள்ள பணியை பெறுவதை உறுதி செய்வது எங்களின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“தரவு பகுப்பாய்வு அறிக்கை: தேசிய தொழில்பழகுநர் மேம்பாட்டுத் திட்டம் (பிப்ரவரி 2018- ஏப்ரல் 2025)” என்று தலைப்பிடப்பட்டுள்ள அறிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார். தேசிய தொழில் பழகுநர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் பழகுநர் போக்குகளை தரவு அடிப்படையில் ஆய்வு செய்வதோடு, விரிவான தரவுகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.
2025 மே 19 நிலவரப்படி, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 43.47 லட்சம் தொழில்பழகுநர்கள் 51,000 நிறுவனங்களில் பங்கு பெற்றுள்ளனர். இவர்களில் பெண்களின் பங்கேற்பு 20 சதவீதத்தை எட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2131391
***
AD/SM/SMB/AG/DL
(Release ID: 2131432)