விவசாயத்துறை அமைச்சகம்
" மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பது பொது சேவைக்கான வழிகாட்டும் கொள்கை: ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் எம் எல் ஜாட்
प्रविष्टि तिथि:
14 MAY 2025 3:56PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநரும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலாளருமான டாக்டர் எம் எல் ஜாட் இன்று 'ராஷ்ட்ரிய கர்மயோகி - பெரிய அளவிலான மக்கள் சேவை திட்டத்தின்' ஒரு பகுதியாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் துணைச் செயலாளர் இயக்குநர் நிலை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய டாக்டர் ஜாட், "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற ஆழமான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், இது வெறும் ஒரு வாக்கியம் அல்ல, ஆனால் பொது சேவையின் அம்சத்தை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டும் கொள்கை என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை அடைய இந்த தத்துவத்தை உள்வாங்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
வேளாண் வளர்ச்சி இல்லாமல் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய முடியாது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் நான்கு தூண்களும் வேளாண்மையுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நேரடியாக ஆதரித்து, இந்தத் துறைக்கு பங்களிப்பதில் நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்குள் மரியாதை, பகிரப்பட்ட தொலைநோக்கு மற்றும் கூட்டு நடவடிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநர் எடுத்துரைத்தார்.
2024 செப்டம்பர் 12 அன்று திறன் மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய கர்மயோகி - பெரிய அளவிலான மக்கள் சேவை திட்டம், அதிகாரிகளிடையே நோக்க உணர்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2128630)
SM/IR/SG/RR
(रिलीज़ आईडी: 2128670)
आगंतुक पटल : 21