நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் பொதுத்துறை வங்கிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க நிதிச் சேவைகள் துறைசெயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Posted On: 08 MAY 2025 7:40PM by PIB Chennai

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) சேர்க்கைக்காக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் பொதுத்துறை வங்கிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திவால் தீர்வு செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஒரு தொடர் ஆய்வை இந்தக் கூட்டம் உள்ளடக்கியிருந்தது. இதில் நிதிச் சேவைகள் துறை, பெருநிறுவன விவகாரங்கள்  அமைச்சகம், இந்திய திவால் மற்றும் நொடித்துப் போதல்  வாரியம் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

என்சிஎல்டியில் சேர்க்கைக்காக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருநிறுவன திவால் தீர்வு செயல்முறை (சிஐஆர்பி) விண்ணப்பங்களை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதன் மூலமும், தேவையற்ற ஒத்திவைப்புகளைக் கேட்பதைத் தவிர்ப்பதன் மூலமும், அதே நேரத்தில் வசூலிப்பதற்கான பிற வழிகளை உருவாக்குவதன் மூலமும் தீர்வு செயல்முறையை விரைவுபடுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. எதிர் தரப்பினர் அற்பமான காரணங்களைக் கூறி நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் முயற்சிகளை வங்கிகளின் வழக்கறிஞர்கள் எதிர்க்க வேண்டும்.

 

கடந்த ஆய்வுக்குப் பிறகு வங்கிகளால் பல்வேறு வழிமுறைகள் மூலம் சில கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கால விரயம் ஏற்படாமல் தீர்வு காணும் பணியை மீண்டும் தொடங்கும் வகையில், தடை உத்தரவுகளை ரத்து செய்வதில் கவனம் செலுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127795

 

***

RB/DL


(Release ID: 2127823)
Read this release in: English , Urdu , Hindi