பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லக்னோ சிஏடி கிளை 38 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் சொந்த அலுவலக கட்டிடத்தைப் பெற்றது- டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 14 APR 2025 7:17PM by PIB Chennai

லக்னோ சிஏடி (மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்) கிளையானது 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, ஆனால்  38 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில்

 சொந்தமாக அலுவலக கட்டிடம் கிடைத்துள்ளது.

 

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் கட்டுப்பாட்டு அமைச்சகமான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு தந்தையை  நினைவுகூரும் அம்பேத்கர் பிறந்த நாளை குறிக்கும் ஒரு சிந்தனை நடவடிக்கையில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கோமதி நகர் பகுதியில் லக்னோ சிஏடி (மத்திய நிர்வாக தீர்ப்பாயம்) கட்டிடத்தை கூட்டாக திறந்து வைத்தனர்.

 

சுமார் 25 கோடி ரூபாய் செலவில் முழு திட்டமும், மத்திய நிதியின் மூலம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆவார்.

 

தலைநகர் லக்னோவில் உள்ள புதிய சிஏடி வளாகம் நிர்வாக நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

 

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், தீர்ப்பாயம் 1987 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து வாடகை வளாகத்தில் செயல்பட்டு வந்ததாகவும், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரட்டை என்ஜின் அரசாங்க மாதிரியின் கீழ் அடையப்பட்ட விரைவான முன்னேற்றத்தை இந்த புதிய வசதி பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். "இந்த கூட்டு நிர்வாக அணுகுமுறையின் கீழ் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளில் இந்த தொடக்க விழாவும் ஒன்றாகும்" என்று அமைச்சர் கூறினார்.

 

எளிதில் அணுகக்கூடிய மற்றும் திறமையான நீதியை உறுதி செய்வதற்கான சிஏடியின் நோக்கத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், தீர்ப்பாயம் 1985 இல் தொடங்கப்பட்டதிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 9.6 லட்சம் வழக்குகளில் 8.88 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து, சுமார் 93% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது என்றார்.

 

வெறும் ரூ.50 மட்டுமே தாக்கல் கட்டணம் மற்றும் வழக்கு தொடுப்பவர்கள் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜராக அனுமதிக்கும் விதிகளுடன், கேட் நீதியின் கோட்பாட்டை வீட்டு வாசலில் உருவகப்படுத்துகிறது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 

நீதித்துறை  தீர்ப்பாயத்தின் நிலையான சாதனையை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார், அதன் பல தீர்ப்புகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டன.

 

புதிய கட்டிடம் வெறும் கட்டமைப்பு மட்டுமல்ல என்று விவரித்த டாக்டர் ஜிதேந்திர சிங், சீர்திருத்தம், நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கான தீர்ப்பாயத்தின் நீடித்த உறுதிப்பாட்டையும் குறிக்கிறது என்றார். நீதித்துறை பணிகளுக்கு உகந்த சூழ்நிலையை வளர்ப்பதற்காக இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய இடத்திலிருந்து நீதித்துறை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த வளர்ச்சி உத்தரப்பிரதேசத்தில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் நாடு முழுவதும் நிறுவன உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மற்றொரு சான்றாக உள்ளது.

----

TS/PKV/KPG/DL


(Release ID: 2121913) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi