சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
09 APR 2025 5:41PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகம், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஒப்பந்தம் இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள், மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றங்கள், பல்வேறு துறைகளில் கல்வி நிகழ்வுகளை இணைந்து நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் க. தரணிக்கரசு, இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உலகளாவிய கல்வி இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான பல்கலைக்கழகத்தின் விருப்பத்துடன் இது ஒத்துப்போகிறது என்று கூறினார். "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்கல்வியில் உலகமயமாக்கலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் பன்முக கலாச்சார கற்றல் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கான வளமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, மெக்காய் வணிகக் கல்லூரியின் டீன் பேராசிரியர் சஞ்சய் ராமச்சந்தர் கூட்டாண்மை குறித்து எடுத்துரைத்தார். மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகம் பகிரப்பட்ட கல்வி தொலைநோக்கு மற்றும் மதிப்புகளைக் கொண்ட ஒரு கூட்டாளியாக இருப்பதைப் பாராட்டினார். மெக்காய் வணிகக் கல்லூரியின் உதவி டீன் முனைவர் சேத் ஃப்ரீ, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் தொடர்புகொள்வதில் தனது நேர்மறையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் இதுபோன்ற ஒத்துழைப்புகள் மாணவர்களின் விளைவுகளையும் தொழில் வாய்ப்புகளையும் கணிசமாக மேம்படுத்தும் என்பதை எடுத்துரைத்தார்.
***
IR/RR
(रिलीज़ आईडी: 2120479)
आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English