சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வக்ஃப் நிர்வாகத்தில் மகளிருக்கு அதிகாரமளித்தல்

Posted On: 08 APR 2025 6:17PM by PIB Chennai

வக்ஃப் பல தலைமுறைகளாக, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைகளுக்கு நிதியளிப்பதன் மூலம் மக்களுக்கு உதவியுள்ளது. ஆனால், பல பெண்கள் அதன் நன்மைகளைப் பெறவில்லை‌ ஏனெனில், அவர்களுக்கு வளங்களைப் பெறவும், முடிவெடுப்பதற்கும் வரைமுறை இருந்தது. வக்ஃப் (திருத்த) மசோதா, 2025, இதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்குப் பரம்பரை சொத்து, நிதி ஆதரவு மற்றும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் வலுவான பங்கு ஆகியவற்றை உறுதி செய்ய இது புதிய விதிகளைக் கொண்டு வருகிறது.

வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025-ல் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, குடும்ப வக்ஃபில் (வக்ஃப்-அல்-அவுலாத்) பெண்களின் பரம்பரை உரிமைகளைப் பாதுகாப்பதாகும். பெண் வாரிசுகள் முதலில் தங்கள் சரியான பரம்பரையைப் பெறாவிட்டால் யாரும் வக்ஃபுக்கு சொத்துக்களை அர்ப்பணிக்க முடியாது என்று மசோதா கூறுகிறது. இது குடும்பங்கள் பெண்களுக்கு சொத்தில் பங்கு மறுப்பதற்கான ஒரு வழியாக வக்ஃபைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. பிரிவு 3 ஏ (2) வக்ஃப் சொத்துக்கள் உருவாக்கப்படும் போது பெண்கள் நியாயமற்ற முறையில் விடுபடவில்லை என்பதை உறுதி செய்கிறது.

விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் அனாதைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கான வக்ஃப்-அல்-அல்-அவுலாத்தின் நோக்கத்தையும் இந்த மசோதா விரிவுபடுத்துகிறது. பிரிவு 3 (ஆர்) (iv) வக்ஃப் நிதியை அவர்களின் நலன் மற்றும் பராமரிப்புக்காகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது நலவாழ்வு மற்றும் நீதிக்கான இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றி, தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கும்.

இந்த மசோதாவில் மற்றொரு முக்கிய மாற்றம் வக்பு நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகும். மாநில வக்ஃப் வாரியங்கள் (பிரிவு 14) மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சில் (பிரிவு 9) ஆகியவற்றில் இரண்டு இஸ்லாமியப் பெண்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இது உறுதி செய்கிறது. இதன் பொருள் வக்ஃப் வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதில் பெண்களுக்கு இனிமேல் அதிகாரம் அளிக்கப்படும். வக்ஃப் நிர்வாகத்தில் அதிகமான பெண்கள் இருப்பது பின்வரும் முக்கியமான தேவைகளுக்கு நிதி செலவிடப்படுவதை உறுதி செய்ய உதவும்:

•     இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

•     சுகாதார மற்றும் மகப்பேறு ஆதரவு

•     பெண் தொழில்முனைவோருக்கு திறன் பயிற்சி மற்றும் நுண்கடன்

•     பரம்பரை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளுக்கான சட்ட உதவி

கடந்த கால ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதன் மூலம் வக்ஃப்பை நியாயமானதாக மாற்றுவதிலும் இந்த மசோதா கவனம் செலுத்துகிறது. பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இது மிகவும் சீரான மற்றும் நியாயமான வக்ஃப் அமைப்பை உருவாக்குகிறது.

அத்துடன், முஸ்லிம் பெண்கள் நிதியைப் பொறுத்து சுதந்திரமாக இருக்க உதவும் வகையில் தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை அமைப்பதை இந்த மசோதா ஊக்குவிக்கிறது. இந்த மையங்கள் சுகாதாரம், வணிகம் மற்றும் ஆடை அலங்காரம் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கும். இது பெண்களுக்கு வேலை தேட அல்லது தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்க உதவும்.

மசோதாவில் ஒரு முக்கிய சீர்திருத்தம் வக்ஃப் பதிவுகளை மின்னணு மயமாக்குவதாகும். மின்னணு பதிவுகள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும், ஊழலைத் தடுக்கும் மற்றும் வக்ஃப் நிதி சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இது அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

வக்ஃப் (திருத்த) மசோதா, 2025, சமூக நலன் மற்றும் நீதிக்கான ஒரு கருவியாக வக்ஃபை மாற்றுவதற்கான ஒரு பெரிய படியாகும். பரம்பரை உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு உதவுவதன் மூலமும், நிர்வாகத்தில் பெண்களின் பங்கை அதிகரிப்பதன் மூலமும், பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த மசோதா வக்ஃப் நிர்வாகத்தில் நீண்டகால பாலின சமத்துவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். எதிர்வரும் ஆண்டுகளில் அவர்களின் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தலை வக்ஃப் உண்மையிலேயே ஆதரிக்கிறது என்பதை உறுதி செய்யும்.

***

(Release ID: 2120128)

SV/IR/RJ/DL


(Release ID: 2120161) Visitor Counter : 46
Read this release in: English , Urdu , Hindi