நித்தி ஆயோக்
"இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொழில்நுட்பத்திற்கான சூழல் அமைப்பை மேம்படுத்துதல்" குறித்த பயிலரங்கம் – புனேவில் நாளை நிதி ஆயோக் நடத்துகிறது
Posted On:
08 APR 2025 5:42PM by PIB Chennai
மகாராஷ்டிர அரசுடன் இணைந்து நிதி ஆயோக் நாளை (2025 ஏப்ரல் 9) புனேவில் உள்ள யஷாடாவில் "இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரண தொழில்நுட்பத்திற்கான சூழல் அமைப்பை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய சமூக நீதி - அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இதனைத் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிர அரசின் சமூக நீதித் துறை அமைச்சர் திரு சஞ்சய் ஷிர்சாத், நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நீண்ட கால நோய்களைக் கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால், இந்தியாவில் உதவி சாதனங்களின் தேவை முக்கியமானதாகி வருகிறது. இந்த உதவி சாதனங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இவை சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க உதவுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுவதோடு உள்நாட்டுத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. மேலும் பிற நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான திறனை உறுதி செய்கின்றன.
இந்தப் பயிலரங்க நிகழ்ச்சியில் சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். இந்தியாவில் உதவி உபகரணங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகிய கருப்பொருள்களில் இந்தப் பயிலரங்கு விவாதங்களைக் கொண்டிருக்கும்.
இந்த பயிலரங்கின் ஆலோசனைகளும், விவாதங்களும், இந்தியாவில் உதவி உபகரண தொழில்நுட்பத்திற்கான சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கும்.
***
(Release ID: 2120002)
TS/PLM/AG/KR
(Release ID: 2120108)