தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இணைப்பு சார்ந்த விஷயங்களில் தற்போதுள்ள டிராய் விதிமுறைகளை மறுஆய்வு செய்தல்" குறித்த முன் ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது

Posted On: 03 APR 2025 5:15PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), இன்று "இணைப்பு சார்ந்த  விஷயங்களில் தற்போதுள்ள டிராய் விதிமுறைகளை மறுஆய்வு செய்தல்" குறித்த முன் ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த மீளாய்வை எளிதாக்குவதற்காக, ஒன்றிணைவுக்கான எதிர்கால மற்றும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்காக தற்போதுள்ள இடைத்தொடர்பு ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரச்சினைகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதன் மூலம் முன் ஆலோசனை செயல்முறையில் பங்கேற்க அனைத்து பங்குதாரர்களையும் அதிகாரசபை அழைக்கிறது.

முன் ஆலோசனை அறிக்கை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகளை  பங்குதாரர்கள் 2025 ஏப்ரல் 16 வரை சமர்ப்பிக்கலாம். பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் / கருத்துக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அது  குறித்த ஆலோசனை அறிக்கை தயாரிக்கப்படும்

கருத்துகளை adv-nsl1@trai.gov.in  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்ஸ், ஸ்பெக்ட்ரம் & உரிமம்-I) திரு சமீர் குப்தாவை +91-11-20907752 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118307

 

*****

RB/DL


(Release ID: 2118560) Visitor Counter : 14
Read this release in: English , Urdu , Hindi