ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: கிராமப்புற நீர் மேலாண்மை குறித்த பயிற்சி
Posted On:
17 MAR 2025 4:48PM by PIB Chennai
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் "கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடும் மேலாண்மையும்" என்ற தலைப்பில் ஒரு பயிற்சித் திட்டம் நடத்ப்பட்டது. இது அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்தின் இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
நீர் வழங்கல் அமைப்பை திறமையாக நிர்வகிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல், சமூக ஈடுபாட்டை ஊக்குவித்தல், நிலையான நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், நீர் தரப் பரிசோதனைகள், மேம்பட்ட சேவை வழங்கல் போன்றவை இந்தப் பயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.
பயிற்சித் திட்டங்களுக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஜல் சக்தி துறையால் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.
நீர் மாநில அரசின் வசம் இருப்பதால், குடிநீர் வழங்கல் திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல், பராமரித்தல் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும். கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு போதுமான நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஆழ்துளை கிணறு செறிவூட்டல் கட்டமைப்புகள், மழைநீர் சேமிப்பு, தற்போதுள்ள நீர்நிலைகளைப் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2111976)