தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா முன்னிலையில் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் ஃபவுண்ட்இட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
Posted On:
10 FEB 2025 4:48PM by PIB Chennai
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று புதுதில்லியில் ஒரு முன்னணி வேலைவாய்ப்பு தளமான ஃபவுண்ட்இட் (முன்னதாக மான்ஸ்டர் என்று அழைக்கப்பட்டது) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும் தேசிய வேலைவாய்ப்பு சேவை தளத்தில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை தேடுபவர்களுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்தத் தளத்தின் மாற்றத்தக்க பங்கை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா எடுத்துரைத்தார். நாள்தோறும் 3,000 முதல் 4,000 வேலைவாய்ப்புகள் குறித்து கூடுதலாக தகவல் வழங்கப்படுவதன் மூலம், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆண்டுதோறும் 1.25 லட்சம் சர்வதேச அளவிலான காலிப்பணியிடங்களையும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு காலிப்பணியிடங்களையும் தேசிய வேலைவாய்ப்பு சேவை தளத்தில் இடம்பெற செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101338
***
TS/IR/RJ/DL
(Release ID: 2101466)