வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவு, குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

Posted On: 06 FEB 2025 5:15PM by PIB Chennai

குப்பை, கழிவு மற்றும் கழிவுநீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிக்க, அரசு அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் மற்றும் ஜூன் 25, 2015 அன்று 500 நகரங்களில்  அம்ருத் திட்டம் ஆகியவற்றைத் தொடங்கியது.

முதலாம் கட்டத்தில் செய்யப்பட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0  திட்டம் அக்டோபர் 1, 2021 அன்று ஐந்து ஆண்டுகள் வரை அதாவது அக்டோபர் 1, 2026 வரை செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் நகராட்சி திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக கையாள்வதை நோக்கமாகக் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது.

நகரங்களை 'தன்னம்பிக்கை' மற்றும் 'நீர் பாதுகாப்பானதாக' மாற்ற அம்ருத் 2.0 அக்டோபர் 1, 2021 அன்று தொடங்கப்பட்டது. அம்ருத் 2.0 திட்டமானது 500 நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து சட்டப்பூர்வ நகரங்களுக்கும் நீர் விநியோகத்தை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் வாழ்க்கையை எளிமையாக்குகிறது.

நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய நிதியின் பங்கு நகரங்களுக்கு வழங்கப்படாமல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்படுகிறதுஎனவே, நகர வாரியான நிதி விவரங்கள் அமைச்சகத்தால் பராமரிக்கப்படுவதில்லை. மேலும், இயக்கத்தின் கீழ் நிதிகள் முழு பணி காலத்திற்கும் ஒதுக்கப்படுகின்றன, ஆண்டுதோறும் அல்ல.

இந்தத் தகவலை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு டோகன் சாஹு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100336

***

TS/PKV/AG/DL


(Release ID: 2100429) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi