சுற்றுலா அமைச்சகம்
உலகளாவிய முன்னணி பயண கண்காட்சி பார்சிலோனா 2024-ல் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2024 6:42PM by PIB Chennai
2024 நவம்பர் 19 முதல் 21 வரை பார்சிலோனாவில் நடைபெறும் உலகளாவிய முன்னணி பயண கண்காட்சிகளில் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்பது மாநாடுகளை நடத்துவதற்கு சாத்தியமான இடமாக இந்தியாவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பருவகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், இந்தியாவை 365 நாட்களும் பயன்படுத்தத் தக்க இடமாக வெளிப்படுத்தவும் எம்ஐசிஇ-ஐ (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) ஒரு முக்கிய துறையாக அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
உயர்மட்ட இணைப்பு, அதிநவீன உள்கட்டமைப்பு, துடிப்பான அறிவு மையம் மற்றும் தனித்துவமான சுற்றுலா ஈர்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கவர்ச்சிகரமான இடமாக இந்தியாவை வெளிப்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் 'வியத்தகு இந்தியா' பிரச்சாரத்தின் கீழ் ஒரு சிறப்பு துணை பிராண்டாக 'மீட் இன் இந்தியா' ஐ அறிமுகம் செய்துள்ளது. ஐதராபாத் மாநாட்டு மையம், ஜெய்ப்பூர் மாநாட்டு மையம் போன்ற முன்னணி மாநாட்டு மையங்கள், சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பெரிய அளவில் நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அதன் வலுவான உள்கட்டமைப்பை முன்னிலைப்படுத்துகின்றன. கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு முதன்மையான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணியின் ஒரு பகுதியாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய பல உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் பல்வேறு வணிக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது சர்வதேச கூட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
சுற்றுலா அமைச்சகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் நாட்டின் முக்கிய எம்.ஐ.சி.இ பங்குதாரர்கள் முன்னிலையில், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள இந்திய கான்சல் ஜெனரல் திரு இன்பசேகர் சுந்தரமூர்த்தி வியக்கத்தகு இந்தியா அரங்கைத் திறந்து வைத்தார். அதன் விரிவான ஊக்குவிப்பு உத்தியின் ஒரு பகுதியாக, சுற்றுலா அமைச்சகம் வெளிநாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அனைத்து வயதினருக்கும், சமூக பொருளாதார வகுப்புகளுக்கும், நாடுகளுக்கும், தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கான சுற்றுலாவை அதிகரிப்பதே சுற்றுலா அமைச்சகத்தின் நோக்கமாகும். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல்கள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விமான இணைப்புகளை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு கூட கொண்டு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் சர்வதேச காங்கிரஸ் மற்றும் மாநாட்டு சங்கத்தின் தரவரிசையில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது.
***
SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2074788)
வருகையாளர் எண்ணிக்கை : 83