பிரதமர் அலுவலகம்
ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்
Posted On:
06 NOV 2024 5:59PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
---
TS/IR/KPG/DL
(Release ID: 2071296)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam