பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மன் கடற்படையுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சி (2024 அக்டோபர் 21-23)

Posted On: 24 OCT 2024 5:15PM by PIB Chennai

இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தில்லி, ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பல் பாடன்-வூர்ட்டம்பெர்க் மற்றும் டேங்கர் பிராங்க்பர்ட் ஆம் மெய்ன் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டன.

வங்காள விரிகுடாவில் முதல் இந்திய-ஜெர்மன் கடல்சார் கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதையும், கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐ.என்.எஸ் தில்லி கப்பல் ஏவுகணை அழிப்பு முன்னணி கப்பலாக விளங்குகிறது.

***

TS/IR/RS/DL




(Release ID: 2067871) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi