சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றார்

Posted On: 19 OCT 2024 1:15PM by PIB Chennai

 

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ். விஜயகுமார் .எஃப்.எஸ். கூடுதல் பொறுப்பாக, வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை செயலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை கிளைச் செயலகத்தின் தலைவராக திரு எஸ்.கோவேந்தனுக்குப் பிறகு திரு எஸ்.விஜயகுமார் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.  2016-ம் ஆண்டு தொகுப்பு .எஃப்.எஸ் அதிகாரியான திரு விஜயகுமார், ரோம், காபூல், தோஹா ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது சென்னை மண்டர பாஸ்போர்ட் அதிகாரியாக 02.09.2024 முதல் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

***

PLM / KV



(Release ID: 2066288) Visitor Counter : 13


Read this release in: English