தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக தொழில்நுட்ப தரப்படுத்துதல் பேரவையில் அதிக அளவில் கலந்து கொண்ட பிரதிநிதிகள்

प्रविष्टि तिथि: 16 OCT 2024 11:47AM by PIB Chennai

ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸ் உடன் இணைந்து, உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையை  பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

 

இந்த மாநாட்டில், 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 36 அமைச்சர்கள் உட்பட 3300 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதற்கு முன்பு நடைபெற்ற எந்தவொரு மாநாட்டிலும், இந்த அளவுக்கு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இந்தப் பேரவை 6-ஜி, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது, இவை அனைத்தும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிலப்பரப்புக்கு அவசியமானவையாகும்.

 

உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையின் (டபிள்யு.டி.எஸ்.ஏ) தொடக்க அமர்வைத் தொடர்ந்து முழுமையான கூட்டங்கள் தொடங்கப்பட்டன, அங்கு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. டபிள்யுடிஎஸ்ஏ-24-வின் பிரதிநிதிகள், இந்தியாவைச் சேர்ந்த  திரு. ஆர். ஆர். மித்தாரை பேரவையின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் ஒரு புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிபுணர் மற்றும் இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் ஆலோசகர் ஆவார். தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தில்  தரப்படுத்தல் பணிகளை அவர் முன்னின்று நடத்தினார்.

 

டபிள்யு.டி.எஸ்.ஏ மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ்-2024-வில், பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. நேற்று ஐஎம்சி-2024-ல் முதலமைச்சர்கள், மாநில அரசு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர்களின் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, தகவல் தொடர்பு  இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர்தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நீரஜ் மிட்டல், கர்நாடகா, குஜராத், தெலங்கானா, அசாம், சிக்கிம், ஒடிசா, தமிழ்நாடு, நாகாலாந்து, ராஜஸ்தான், மிசோரம், பீகார், கோவா, பஞ்சாப் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாநிலங்களின் அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

 

தொலைத்தொடர்புத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல அமைச்சகம் மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அமைச்சர் சிந்தியா விளக்கினார். மாநிலங்கள் 100% அளவிடக்கூடிய செயலாக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநிலங்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவ மத்திய அரசு தோளோடு தோள் நிற்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு  துணையாகவும் நிற்கும் என்று உறுதியளித்தார்.

 

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த சேவைகளை வழங்க டிஜிட்டல் கண்டுபிடிப்புக்கான சூழலை உருவாக்குமாறு மாநிலங்களை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் வலியுறுத்தினார்.

மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் இணைய பாதுகாப்பு, இணையதள பாதுகாப்பு மற்றும் இணையதள தொழில்நுட்ப பாதுகாப்பு, பாரத் நெட் மற்றும் 4ஜி செறிவு திட்டத்தை அமல்படுத்த மாநிலங்களின் ஆதரவின் தேவை, வழித்தட உரிமை, இடம்/நில ஒதுக்கீடு, மின்சாரம் மற்றும் வலையமைப்பின் பயன்பாடு ஆகியவை குறித்தும் மாநிலங்களுக்கு உணர்த்தப்பட்டது.

 

மாநில ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் 4ஜி / 5ஜி பயன்பாட்டு வழக்குகளை வெளியிடுவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கு, தொலைத் தொடர்புத் துறையின் அடுத்த கட்ட முதலீட்டிற்கு மாநில ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்தல், வணிக வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

பின்னர் அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியா மொபைல் காங்கிரஸ்  2024-ல் பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டு பல அதிநவீன மேக் இன் இந்தியா தொலைத் தொடர்பு தயாரிப்புகளைத் தொடங்கி வைத்தார்.

 

PKV/KR

***


(रिलीज़ आईडी: 2065261) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी