நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவுக் கழகம் சிறப்புத் தூய்மை இயக்கம் 4.0-க்கு ஆயத்தமாகிறது

Posted On: 30 SEP 2024 5:12PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகம், 2024 செப்டம்பர் 16 முதல் சிறப்பு இயக்கம் 4.0-ஐ தொடங்கியுள்ளது. இயக்கம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆயத்தக் கட்டம் 2024 செப்டம்பர் 16 முதல் 30 வரையிலும், அதைத் தொடர்ந்து செயல்படுத்துதல் கட்டம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான இயக்கம் இந்திய உணவுக் கழகத்தின் கள மற்றும் வெளியூர் அலுவலகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. கூடுதலாக வடக்கில் லே லடாக் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை உள்ள தொலைதூர இடங்களை உள்ளடக்கிய நாடெங்கும் 760-க்கும் மேற்பட்ட இடங்களில், இட மேலாண்மையில் கவனம் செலுத்துதல், கள அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துதல், பழைய கோப்புகள் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து களையெடுப்பது, பதிவேடு நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஆகியவை  முக்கிய அம்சங்களாகும்.

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் (அக்டோபர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை), கழிவு செய்யப்பட்ட பொருட்கள் மூலம் கழகம் சுமார் ரூ.31 லட்சத்தை ஈட்டியது.

தற்போதைய சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

தூய்மை, திறமையான இட மேலாண்மை மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பதிவு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்திய உணவுக் கழகம் சிறப்பு இயக்கம் 4.0-ன் இலக்குகளை செயல்படுத்த முழுமையாக ஆயத்த நிலையில் உள்ளது.

----

LKS/KPG/DL


(Release ID: 2060398)
Read this release in: English , Urdu , Hindi