விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் தூய்மையே சேவை இயக்கத்தை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2024 5:56PM by PIB Chennai

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் சார்பில், தூய்மையே சேவை மற்றும் சிறப்பு இயக்கம் 4.0 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தூய்மை முயற்சிகளில் விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. தூய்மை மற்றும் சுகாதாரத்தை அறியச்  செய்ய உள்ளூர் பகுதிகளில் தெரு நாடகங்கள் நடைபெற்றன. கழிவுகள் இல்லாத நிகழ்வுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் திரட்டுதல் மற்றும் தூய்மைக்காக மக்களை சென்றடைதல் குறித்து பல்வேறு கல்வி சார்ந்த பொது செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும நிறுவனங்களில் நடந்தன.

---

IR/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2058370) வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी