பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தூய்மையே சேவை பிரச்சாரம் 2024 ஐ தொடங்குகிறது

Posted On: 19 SEP 2024 2:19PM by PIB Chennai

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அதன் இணைக்கப்பட்ட / சார்நிலை அலுவலகங்களுடன், ' தூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தின்' போது, செப்டம்பர் 17 முதல் அக்டாபர் 1, 2024 வரை 'இயற்கை தூய்மை சடங்கு தூய்மை' என்ற கருப்பொருளுடன் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்கும். இந்தப் பிரச்சாரம் 2 அக்டோபர் 2024 அன்று தூய்மை இந்தியா தினக் கொண்டாட்டத்துடன் முடிவடையும்.

 

தூய்மை உறுதிமொழிகள், சிறப்பு ஆழமான தூய்மை இயக்கங்கள், தாயின் பெயரில் ஒரு மரம் பிரச்சாரங்கள், சிரமதான நடவடிக்கைகள், ஓவியம் வரைதல், கோஷம் எழுதுதல் போன்ற போட்டிகள், மக்களின் பங்களிப்பை வலியுறுத்துதல் மற்றும் சுகாதாரம் மற்றும் தூய்மையை ஒரு கூட்டு ஈடுபாடாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு துப்புரவு நடவடிக்கைகளை இத்துறை ஏற்பாடு செய்யும்.

 

பாதுகாப்புத் துறையின் செயலாளர், செப்டம்பர் 13 அன்று புதுதில்லியின் மத்திய ரிட்ஜ் பகுதியில் துறை அதிகாரிகளுடன் இணைந்து தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரச்சாரத்தைத் தொடங்கினார். 17 செப்டம்பர்  அன்று துறையின் அனைத்து மூத்த மற்றும் பிற அதிகாரிகளுக்கும் 'தூய்மை' உறுதிமொழியை அவர் வழங்கினார்.

 

அடையாளம் காணப்பட்ட தூய்மை இலக்கு அலகுகளை மாற்றியமைக்க சிரமதான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

***

(Release ID: 2056591)
PKV/RR/KR



(Release ID: 2056675) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi