திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆலோசனை பயிலரங்கை நடத்தியது

Posted On: 29 AUG 2024 8:50PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை  பயிலரங்கு  கூட்டம் ஒன்றை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.  மத்திய பட்ஜெட் 2024 இல் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளபடி, திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கான "வேலைவாய்ப்பு மற்றும் திறனுக்கான பிரதமரின் தொகுப்பு" அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழில்துறை ஆலோசனை பயிலரங்கில் கலந்து கொண்டனர்.  

புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தல், தற்போதுள்ள ஐ.டி.ஐ படிப்புகளை சீரமைத்தல், புதிய படிப்புகளுக்கான தொழில்துறை ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தொழில்துறை ஒத்துழைப்பு கூறுகளை வடிவமைப்பது குறித்து தொழில்துறையின் கருத்துக்களைக் கோருவதை இந்த ஆலோசனை நோக்கமாகக் கொண்டிருந்தது. 

200  ஐ.டி.ஐ.க்களை மையங்களாகவும், மீதமுள்ள 800 ஐ.டி.ஐ.க்களை ஸ்போக் மாதிரியாகவும் தரம் உயர்த்த அமைச்சகம் முன்மொழிந்தது. இந்த மைய தொழிற்பயிற்சி நிலையங்கள் திறன்மிகு மையங்களாகவும் உருவாக்கப்படும். தொழில்துறையின் பங்கு முக்கியமானது, மேலும் திட்டத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக நிறுவனங்கள் நிர்வாக ஆதரவு, பயிற்சியாளர்கள், மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் சிஎஸ்ஆர்  பங்களிப்புகளை கூட வழங்க முடியும் என்று முன்மொழியப்பட்டது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வளங்களை திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நிறுவன வழிமுறைகளை மையமாகக் கொண்டு, திட்டத்தின் அமலாக்கத்தை மேற்பார்வையிடுவதற்கான ஆளுகை கட்டமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த ஆலோசனை வேகமாக மாறிவரும் தொழில்துறை நிலப்பரப்பின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் ஒரு வலுவான திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பணியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, "இன்று நாம் கொள்கைகள், உலகளாவிய சிறந்த நடைமுறைகள், தொழிற்பயிற்சிக்கான கூட்டாளர் நாடுகளின் பாதைகள் மற்றும் உள்ளகப் பயிற்சிக்கான  வழிகள் திறக்கப்படும் ஒரு நெகிழ்வான கட்டத்தில் இருக்கிறோம். தொழில்துறையினரின் திறமை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அவர்களின் தேவைக்கேற்ப பாதையை வடிவமைக்க இது ஒரு வாய்ப்பாகும். ஐ.டி.ஐ சுற்றுச்சூழல் அமைப்பு பரந்ததாக உள்ளது, ஆனால் சரியான ஆளுகை மற்றும் தொழில் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வதன் மூலம் நம்மை போட்டித்தன்மையுடன் உலகின் திறன் மூலதனமாக மாற்ற முடியும்’’ என்று கூறினார்.

தேசிய அளவில் உள்ள 5 பயிற்சியாளர்களுக்கான (ToT) பயிற்சி நிறுவனங்களை தரம் உயர்த்துவதுடன், சவால் அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தேர்வு செய்யப்படும் . இந்த மேம்படுத்தல்களில் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதுள்ள படிப்புகளை மேம்படுத்துவதும் புதியவற்றை உருவாக்குவதும் அடங்கும்.

******************

PKV/KV



(Release ID: 2049992) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi