ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சுதந்திர தின தொலைநோக்கை நிறைவேற்ற மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் உறுதி

Posted On: 16 AUG 2024 6:30PM by PIB Chennai

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், புதுதில்லியில் இன்று இரு அமைச்சகங்களுக்கும் உட்பட்ட  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், பன்முக சேவை ஊழியர்கள் முதல் செயலாளர் அளவிலான அதிகாரிகளும் பங்கேற்றனர். துறையின் இணையமைச்சர்கள் திரு பாகிரத் சௌத்ரி மற்றும் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சௌகான், சுதந்திர தின உரையில், வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, கடினமாக பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.பிரதமர் கூறியது போல 3 மடங்கு அதிக வேகத்தில், 3 மடங்கு கடினமாக பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046028      

***

MM/AG/DL


(Release ID: 2046077)
Read this release in: English , Urdu , Hindi