சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆன்லைன் சட்ட சேவைகளுக்கான ஒழுங்குமுறை

Posted On: 09 AUG 2024 12:35PM by PIB Chennai

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை தரநிலைகள் மற்றும் தொழில்முறை ஆசாரம் தொடர்பான விதிகளை வகுக்க இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பி.சி.ஐ விதிகள், 1975-ன் விதி 36-ன் கீழ் வழக்கறிஞர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது அல்லது கோருவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ரிட் மனு எண்கள் 31281 மற்றும் 31428 / 2019-ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 08.07.2024 தேதியிட்ட செய்திக்குறிப்பின் மூலம், இந்திய பார் கவுன்சிலின் சமீபத்திய வழிகாட்டுதல்கள் அப்படியே உள்ளன, அவற்றை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

08.07.2024 தேதியிட்ட அதன் சமீபத்திய செய்திக்குறிப்பின்படி, தடையை மீறும் வழக்கறிஞர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உத்தரவுகளை  இந்திய பார் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது, இதில், அனைத்து மாநில பார் கவுன்சில்களும் ஆன்லைன் தளங்களுக்கு நோட்டீஸ் (களை) அனுப்புவதை நிறுத்துவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் அடங்கும்.

வழக்கறிஞர்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் விளம்பரம் செய்வது மற்றும் வேண்டுகோள் விடுப்பதற்கு தடை விதிக்கும் அதிகாரம், இந்திய பார் கவுன்சில் விதிகள், 1975-ன் விதி 36-ல் இருந்து வருகிறது, இது பின்வருமாறு:

 

"ஒரு வழக்கறிஞர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றறிக்கைகள், விளம்பரங்கள், தரகர்கள், தனிப்பட்ட தகவல்தொடர்புகள், தனிப்பட்ட உறவுகளுக்கு உத்தரவாதமில்லாத நேர்காணல்கள், செய்தித்தாள் கருத்துக்களை வழங்குதல் அல்லது ஊக்குவித்தல் அல்லது அவர் ஈடுபட்டுள்ள அல்லது சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக தகவல் வெளியிட அவரது புகைப்படங்களை வழங்கக்கூடாது."

இந்த விதி சட்டத் தொழிலின் தொழில்முறை ஒழுக்கம் மற்றும் நெறிமுறை தரங்களை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையான விளம்பரம் அல்லது வேலையைக் கோருவதையும் தடைசெய்கிறது, சட்டத் தொழில் ஒரு வணிக நிறுவனமாக இல்லாமல், சேவை சார்ந்த நடைமுறையாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

இந்த விவகாரம், இந்திய பார் கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள் வருகிறது, மேலும் ஆன்லைன் தளங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கும், கோருவதற்கும், வழக்கறிஞர்கள் மீதான தடையை அமல்படுத்த செயலூக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை  கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில பார் கவுன்சில்களுடன் ஒருங்கிணைந்து இந்த உத்தரவுகளுக்கு இணங்குவதை இந்திய பார் கவுன்சில் கண்காணிக்கிறது. அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்திய பார் கவுன்சில் தற்போதுள்ள விதிகளை அமல்படுத்துவதிலும், அதன் உத்தரவுகள் மூலம் மீறல்களை நிவர்த்தி செய்வதிலும், தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. புதிய விதிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்களுக்கான எந்தவொரு தேவையும் வளர்ந்து வரும் சூழ்நிலை மற்றும் தற்போதைய அமலாக்க நடவடிக்கைகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இந்த தகவலை மத்திய சட்டம்-நீதித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2043470)

MM/AG/KR



(Release ID: 2043695) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP