எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மின் தொகுப்புகளின் சைபர் பாதுகாப்பு

Posted On: 08 AUG 2024 4:15PM by PIB Chennai

மின் தொகுப்புகளின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ், இந்திய கணினி அவசர கால நடவடிக்கைக் குழு, சைபர் பாதுகாப்பு நிகழ்வுகளுக்குத் தீர்வு காண தேசிய முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம், மின் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

கணினி மின்சார பாதுகாப்பு நடவடிக்கை குழு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மின் துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அனல், புனல், மின் விநியோகம், பகிர்மானம், தொகுப்பு இயக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவுகளுக்காக கூடுதலாக அவசரகால நடவடிக்கை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

2024 மார்ச் மாத நிலவரப்படி 35 மாநில மின்சார விநியோக மையங்களில் 30 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் 2021 முதல் 2024 வரை சைபர் பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

***

PKV/RR/KR/DL



(Release ID: 2043313) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP