மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

கால்நடைகளில் செயற்கை கருவூட்டல்

Posted On: 31 JUL 2024 5:24PM by PIB Chennai

உள்நாட்டு பசு மாட்டு இனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பால் உற்பத்தியை அதிகரிக்க தேசிய கோகுல் இயக்கம்  செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  பதிலளித்துள்ள அவர், கோகுல் இயக்கத்தின் கீழ், உள்நாட்டு மாட்டு இனங்களின் செயற்கை கருவூட்டல் திறனை மேம்படுத்தி இத்திட்டம் அதிக அளவில் வெற்றி அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

செயற்கை கருவூட்டலுக்கு தேவையான விந்தணு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக உயர் மரபணு ரக காளைகள் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039703               

***

MM/AG/KR/DL



(Release ID: 2039842) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP