ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை மேம்படுத்த அரசு முயற்சி
Posted On:
26 JUL 2024 5:16PM by PIB Chennai
கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் நாடு முழுவதும் கைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம் நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார்.
இந்தத் திட்டங்களின் கீழ், தகுதியான கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்கள், மேம்படுத்தப்பட்ட தறிகள் மற்றும் துணைக்கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது. சூரிய சக்தி எரிபொருளில் செயல்படும் அலகுகள், பணிமனை கட்டுமானம், தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொதுவான உள்கட்டமைப்பு, உள்நாட்டு கைத்தறி பொருட்களை விற்பனை செய்தல், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை அரசு செய்து தருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், கைவினைக் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான கைவினைப் பொருட்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை கைவினை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
*****
VK/DL
(Release ID: 2037915)