சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

நீதித்துறையை வலுப்படுத்தும் மத்திய பட்ஜெட் அமைச்சர் திரு.அர்ஜூன்ராம் மேக்வால் பாராட்டு

Posted On: 24 JUL 2024 5:41PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் "முழு அரசாங்கத்தின்" அணுகுமுறையாக உள்ளது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்  மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு. அர்ஜுன்ராம் மேக்வால், பாராட்டியுள்ளார்.

'2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டங்கள்' நீதி வழங்குதலை வலுப்படுத்துதல் - இந்தியாவை வலுப்படுத்துதல்'.என்ற காணொலி வாயிலான கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.  நீதித்துறை உள்கட்டமைப்பு, நீதிக்கான முழுமையான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல் (திஷா), மின்னணு- நீதிமன்ற திட்டங்கள் மற்றும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டம் என இந்தாண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள நான்கு முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நேரடி கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உத்வேகத்தையும் வளர்ச்சியையும் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையோடு பட்ஜெட் முன்மொழிவுகளை பார்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

*****

VK/DL



(Release ID: 2037912) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP