சுரங்கங்கள் அமைச்சகம்

கடற்பகுதியில் சுரங்கம் அமைப்பது குறித்த பயிலரங்கிற்கு சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்தது

Posted On: 15 MAY 2024 7:45PM by PIB Chennai

கடற்பகுதியில் சுரங்கம் அமைப்பது குறித்த பயிலரங்கை சுரங்க அமைச்சகம் புதுதில்லியில் இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் கலந்து கொண்டார். புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், சுரங்க அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் லோகியா. மத்திய அரசின் பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள், பல்வேறு மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், ஏலதாரர்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் பேசிய போது, தொழில்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதன் மூலமும், வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும், எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதன் மூலமும் நாட்டிற்கு உரிய நன்மைகளை ஏற்படுத்துவதில் கடற்பகுதி சுரங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடற்பகுதி சுரங்கத் தொழிலின் எதிர்காலம்   நேர்மறையாக இருப்பதாகவும், இந்தப் புதிய துறையின் வளர்ச்சிக்காக சுரங்க அமைச்சகம் பல்வேறு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

***

SMB/IR/AG/KV

 



(Release ID: 2020768) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi , Punjabi