சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக முழுமையான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

Posted On: 15 APR 2024 7:29PM by PIB Chennai

ஒரு வலுவான மற்றும் நிலையான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்திஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுதில்லியில் ஒரு நாள் தேசிய  பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது, இது முழுமையான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, திட்டமிடல் மற்றும் தணிப்பு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு அனுராக் ஜெயின் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் வனப்பகுதிகளுக்கான தலைமை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர் திரு. ஜிதேந்திர குமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் பல்வேறு குழு விவாதங்கள் பயிலரங்கின் போது நடைபெற்றன. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களில் முக்கிய நுண்ணறிவுகளை வழங்கியது.  'வனவிலங்குகள் மீதான நேரியல் உள்கட்டமைப்பின் தாக்கங்களைத் தணிப்பதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள்' பற்றிய நுண்ணறிவு; வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்பான பிரச்சினைகள்; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்; கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதன் பயன்பாடு போன்றவை குறித்து இந்த அமர்வுகளில் விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் நிலையான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை திறம்பட உருவாக்க பல்வேறு துறைகள் கூட்டு அணுகுமுறையைக் கொண்டிருப்பது  அவசியம் என்று திரு அனுராக் ஜெயின் தது தொடக்க உரையில்  கூறினார்.

***

(Release ID: 2017984)

PKV/BR/RR



(Release ID: 2018003) Visitor Counter : 59


Read this release in: Urdu , English , Hindi , Bengali