பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பாலின சமஉரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது
Posted On:
09 FEB 2024 1:51PM by PIB Chennai
பாலின நீதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள அரசின் முக்கியமான உறுதிப்பாடாகும். பாலின நீதியுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்கவும், பல்வேறு துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், பொருளாதார மற்றும் அரசியலில் அதிகாரமளித்தல் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த கடுமையான சட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
விரைவான மற்றும் நீடித்த தேசிய வளர்ச்சியில் பெண்களை சம பங்கெடுப்பாளர்களாக மாற்றும் வகையில், பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு பன்முக அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. சமக்ரா சிக்ஷா, கல்வி உதவித்தொகை திட்டங்கள், பாபு ஜெகஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம், தூய்மை கல்வி இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, பெண்குழந்தைகளுக்கு உகந்த பள்ளிகள் மற்றும் அவர்களின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வசதிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன.
கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மின்-கற்றல் மூலம் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக, 'தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்விக்கான தேசிய இயக்கம்' திட்டம், இளம் ஆர்வமுள்ள மனங்களுக்கான செயலில் கற்றலுக்கான கற்றல் வலைகள், தேசிய டிஜிட்டல் நூலகம், மெய்நிகர் ஆய்வகம், தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி ஒத்துழைப்பு போன்றவற்றை நிர்வகித்து வருகிறது. பிரதமரின் கல்வி லட்சுமி செயல் திட்டத்தின் கீழ், வங்கிகள் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக வித்யா லட்சுமி இணையதளம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க கடந்த ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் சிறுமிகளின் பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்த விக்யான் ஜோதி 2020-ல் தொடங்கப்பட்டது.
2017-18 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வெளிநாட்டு ஃபெல்லோஷிப் திட்டம், இந்திய பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஸ்டெம் துறையில் சர்வதேச கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. விண்வெளி பயன்பாட்டு மையத்தில் அறிவியல் கருவிகளை உருவாக்குதல் மற்றும் சோதனை செய்தல் உட்பட இந்தியாவின் முதல் செவ்வாய் கிரக சுற்றுப்பாதை பணி அல்லது மங்கள்யானில் பல பெண் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர்.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா – கிராமிய திட்டம் பெண்களின் உரிமையை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் வீட்டை இழந்தவர் / திருமணமாகாதவர் / பிரிந்த நபர் / திருநங்கை தவிர, பெண்ணின் பெயரில் அல்லது கணவர் மற்றும் மனைவி பெயரில் கூட்டாக வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2004351)
ANU/SMB/BS/RS/KRS
(Release ID: 2004631)