அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சந்திப்பு (என்எஸ்ஓஐஎம்): அடித்தள மேம்பாட்டுக்காக அறிவியலையும் சமூகத்தையும் இணைக்கிறது
Posted On:
15 JAN 2024 3:28PM by PIB Chennai
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐ.ஐ.எஸ்.எஃப்) தேசிய சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சந்திப்பை (என்.எஸ்.ஓ.ஐ.எம்) நடத்த உள்ளது . தேசிய சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சந்திப்பு என்பது சமூகத்தை அறிவியல் சந்திக்கும் இடமாகும். கண்டுபிடிப்பு என்பது அடித்தள வளர்ச்சிக்கான ஊக்கியாக மாறுகிறது. தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் டி.எஸ்.டி-சீட் பிரிவு, விபாவாணி இந்தியா ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேர்மறையான மாற்றத்திற்கான கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.
என்.எஸ்.ஓ.ஐ.எம் -2023 2024 ஜனவரி 17 முதல் 19 வரை ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் நிகழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். தேசிய சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சந்திப்பு -2023 இன் கவனம் "அடித்தள வளர்ச்சிக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்" என்பதை மையமாகக் கொண்டது.
இந்த சந்திப்பு ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உருமாற்ற சக்தியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் தற்சார்பு இந்தியாவிற்காக கைகோர்க்க இது அழைப்பு விடுக்கிறது. மாற்றத்திற்கான ஊக்கியாக இருக்கவும் மற்றும் அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் கூட்டு முயற்சிகளுக்கு பங்களிக்கவும் இது அழைப்பு விடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1996224
*****
ANU/SMB/DL
(Release ID: 1996300)