சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள்
Posted On:
20 DEC 2023 3:06PM by PIB Chennai
மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படும். முதியோர் இல்லங்களை நடத்துவதற்கும், பராமரிப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அல்லது மாத வருமானமாக ரூ.15,000/- சம்பாதிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் வயது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முகாம் முறையில் உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயது வரையுள்ள முதியோருக்கு மாதந்தோறும் ரூ.200 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 80 வயதை அடையும் போது ஓய்வூதியம் ரூ.500/- ஆக உயர்த்தப்படுகிறது.
இத்தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
***
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 1988867)