சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மாநில வக்பு வாரியங்களுக்கு நிதி உதவி வழங்க குவாமி வக்பு வாரிய வளர்ச்சித் திட்டத்தை சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்படுத்துகிறது

Posted On: 14 DEC 2023 4:11PM by PIB Chennai

சிறுபான்மையினர் நல அமைச்சகம் குவாமி வக்பு வாரிய வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகிறது, இதன் கீழ் வக்ஃப் பதிவுகளை கணினிமயமாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் மாநில வக்ஃப் வாரியங்களுக்கு  நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், உதவி நிரலாளர், நில அளவை உதவியாளர், கணக்காளர், சட்ட உதவியாளர் போன்ற மனிதவளத்தை பணியமர்த்துதல், காணொலி காட்சி வசதி அமைத்தல், மையப்படுத்தப்பட்ட கணினி வசதி, நிறுவன வள திட்டமிடல் தீர்வு ஆகியவற்றை நவீனமயமாக்குவதற்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் அமைச்சகம் துணைபுரிகிறது.

15-வது நிதிக்குழுவின் காலத்தில், 2021-22 முதல் 2025-26 வரை குவாமி வக்பு வாரிய வளர்ச்சி திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்கீடு ரூ.70 கோடியாகும். 

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1986387) Visitor Counter : 41


Read this release in: English , Urdu