நித்தி ஆயோக்

நித்தி ஆயோக்கில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை தூய்மையே சேவை இயக்கத்தின் அமலாக்கம்

Posted On: 18 OCT 2023 11:39AM by PIB Chennai

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா தினத்தை முன்னிட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை 2023 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை 'தூய்மையே சேவை' இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. தூய்மை இந்தியா திட்டத்தின் 9 ஆண்டுகளைக் கொண்டாடுவதற்கும், தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியாவை உருவாக்குவதற்குமான அனைவரின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்வதற்கும்,  இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:

நித்தி ஆயோக்கில் உள்ள பதிவு அறையின் ஆய்வு 20-09-2023 அன்று மூத்த அதிகாரிகளால் நடத்தப்பட்டது, கோப்புகள் ஆய்வு, அகற்றுதல் மற்றும் பழைய பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், குப்பைகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நித்தி ஆயோக் வாயில்கள், வெளிப்புறப் பகுதிகள் மற்றும் அலுவலக வளாகங்கள் முழுவதும் பிரச்சார பதாகைகள் மற்றும்  ஸ்டாண்டிகள் நிறுவப்பட்டன.

நித்தி ஆயோக் அலுவலக வளாகத்தில் 25-09-2023 முதல் 29-09-2023 வரை அனைத்துத் தளங்களிலும் ஊழியர்களின் தீவிரப் பங்கேற்புடன் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது.

நித்தி ஆயோக் துறை உணவகக்கூடம் மற்றும் சமையலறையை 25-09-2023 முதல் 29-09-2023 வரை ஆழமாக தூய்மை செய்யும் பணியை நலக் குழு மேற்கொண்டது.

அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா தினத்தை நினைவுகூரும் வகையில், நித்தி ஆயோக் ஊழியர்களுக்கு அதன் துணைத் தலைவர் தூய்மை உறுதிமொழி செய்துவைத்தார்.

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1968735) Visitor Counter : 113