பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிவதற்கான இந்திய ராணுவ முன்முயற்சியான உத்பவ் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தொடக்க குழு விவாதம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2023 5:07PM by PIB Chennai

இந்திய ராணுவம், இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் (யு.எஸ்.ஐ) இணைந்து, "இந்திய ராணுவ அமைப்புகளின் பரிணாமம், போர் சண்டை மற்றும் உத்திசார் சிந்தனை- துறையில் தற்போதைய ஆராய்ச்சி மற்றும் முன்னோக்கிய பாதை" என்ற தலைப்பில் புராஜெக்ட் உத்பவ் கீழ் ஒரு  குழு விவாதத்தை இன்று நடத்தி முடித்தது.

புராஜெக்ட் உத்பவ் என்பது பண்டைய இந்திய அரசாட்சி, போர்க்கலை, ராஜதந்திரம் மற்றும் மகத்தான மூலோபாயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆழமான இந்தியப் பாரம்பரிய அரசு மற்றும் உத்திசார் சிந்தனைகளை மீண்டும் கண்டுபிடிக்க இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். இந்தத் திட்டம் இந்தியாவின் வளமான வரலாற்று விவரிப்புகளை அரசு மற்றும் உத்திசார்  சிந்தனைகளின் தளங்களில் ஆராய முயற்சிக்கிறது. இது சுதேச ராணுவ முறைகள், வரலாற்று நூல்கள், பிராந்திய நூல்கள் மற்றும் ராச்சியங்கள், கருப்பொருள் ஆய்வுகள் மற்றும் சிக்கலான கௌடில்யர் ஆய்வுகள் உள்ளிட்ட பரந்த அலைவரிசையில் கவனம் செலுத்துகிறது.

இந்த முன்னோடி முயற்சி,  இராஜதந்திரம் மற்றும் போர் ஆகியவற்றில் இந்தியாவின் பழங்கால அறிவை இந்திய ராணுவம் அங்கீகரித்ததற்கு சான்றாக நிற்கிறது. புராஜெக்ட் உத்பவ் அதன் மையத்தில், வரலாற்று மற்றும் சமகாலத்தை இணைக்க முயற்சிக்கிறது. உள்நாட்டு ராணுவ அமைப்புகளின்  பரிணாமம், காலங்காலமாக கடந்து வந்த உத்திகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த சிந்தனை செயல்முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதே இதன் குறிக்கோள் ஆகும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் வினோத் ஜி கண்டரே (ஓய்வு) இந்த விவாதத்திற்கு தலைமை தாங்கினார். இந்தக் குழுவில் இந்தத் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அறிஞர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள அதிகாரிகள் அடங்குவர், இதில் இராணுவக் கல்வியில் திறமையான அறிஞரான டாக்டர் கஜரி கமல், கௌடில்யர் பற்றிய தனது ஆழமான அறிவை வெளிப்படுத்தினார்.

**

(Release ID: 1962072)

ANU/AD/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1962243) வருகையாளர் எண்ணிக்கை : 277
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी