குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவையில் இன்று அவைத் தலைவரின் நிறைவுரை மற்றும் தீர்மானத்தின் முழு வடிவம்

Posted On: 20 SEP 2023 7:45PM by PIB Chennai

நிறைவுரை:

 

மாண்புமிகு உறுப்பினர்களே, விண்வெளி ஆராய்ச்சியில் தேசத்தின் மகத்தான பயணம் குறித்து மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதத்தின் முடிவுக்கு நாம் இப்போது வந்துள்ளோம். அவையிலும் வெளியிலும் மாண்புமிகு உறுப்பினர்களின் கருத்துக்களையும், உள்வாங்குதலையும், மதிப்பீடுகளையும் மிகுந்த கவனத்துடன் கேட்டேன். உரைகளில் ஒரு பொதுவான ஊடிழை தெளிவாகத் தெரிந்தது அது தேச நலன், மகத்தான ஒருங்கிணைந்த முயற்சிகள்.

 

நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால், மதிநுட்பம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் பொருத்தமான தருணங்களில் நமது விண்வெளி பயணத்தில் பெருமை மற்றும் சாதனையின் பகிரப்பட்ட உணர்வு எதிரொலித்தது.

 

பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி பழங்காலத்திலிருந்தே மனித குலத்தை வசீகரித்து வருகிறது. மாண்புமிகு உறுப்பினர்கள் அதனைக் கவிதை வடிவிலும் பிரதிபலித்துள்ளனர். உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் வானியலின் வலுவான பாரம்பரியத்தை வளர்த்துள்ளது. ஆரியபட்டர், வராகமிஹிரர், பிரம்மகுப்தர், பாஸ்கரா போன்ற நமது ஆரம்பகால அறிஞர்களின் வளமான பங்களிப்புகளை இந்தியா மட்டுமல்ல, உலகமே அங்கீகரித்துள்ளது! அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், குப்த சகாப்தத்தின் (சுமார் 1500 ஆண்டுகள் பழமையான) கணிதவியலாளரும் வானியலாளருமான ஆர்யபட்டாவின் பெயரிடப்பட்ட முதல் இந்திய விண்கலம் 1975 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.

 

நமது அறிவியல் பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆய்வு மனப்பான்மை, துணிவு மற்றும் கண்டுபிடிப்புகளால் தூண்டப்பட்டு, புதிய உத்வேகத்துடன் விண்வெளியின் அறியப்படாத பகுதிகளை ஆராய நம்மைத் தூண்டியுள்ளது! இப்படிச் செய்யும்போது, ஒருபுறம் நமது தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தி வருகிறோம். மறுபுறம், அதன் பலனை சமூக நலனுக்காக பயன்படுத்துவதிலும், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே, சந்திரயான் -2 திட்டத்தின் போது, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்தவும்  மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் உடனிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

அறிவியல் சமூகத்தில் தலைமைத்துவத்தின் இந்த நிலையான ஆதரவு மற்றும் நம்பிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி சந்திரயான் -3 மற்றும் நமது  முந்தைய பயணங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

 

இந்தியாவின் விண்வெளித் திட்டம் தேசியப் பெருமைக்குரியது. இது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தன்னிறைவுக்கு ஒரு சான்றாகும். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு உறுதியான ஆதரவை வழங்குவது மக்களின் விருப்பங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தில் பங்குதாரர்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நமது கடமையாகும். அமிர்த காலத்திலேயே பாரதம் தனது கடந்த கால மகிமையை மீண்டும் பெற நடைபோடும் போது, அதற்கு உறுதுணையாக நிற்போம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே, பல்வேறு தலைவர்களே, இது ஒரு சந்தர்ப்பம் என்றும், விவாதத்தின் மனநிலை மிக அதிகமாக இருந்தது என்றும் அவர்கள் கூறினர். இது பங்களிப்புக்குரியது, அற்புதமான உரைகள் செய்யப்பட்டன, ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல முடியும், நான் ஒவ்வொரு உரையையும் கேட்டேன், ஒவ்வொரு பேச்சாளரும் இந்த பிரச்சினைக்கு ஒரு கண்ணோட்டத்தை பங்களித்துள்ளனர். அந்த வகையில் கீழ்க்கண்ட தீர்மானத்தை அவையின் முன் வைக்கிறேன்.

 

தீர்மானம் :

 

"இந்தியாவின் விண்வெளித் திட்டம் தேசிய பெருமையின் ஆதாரமாகும்இது நாட்டின் உள்ளார்ந்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமைக்கு தொடர்ச்சியான சான்றாகும்.

 

உறுதியான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் நமது விஞ்ஞானிகளுக்கு அவர்களின் திறனை முழுமையாக உணரவும், அவர்களின் ஆற்றலைக் கட்டவிழ்த்துவிடவும், இந்த வரலாற்று மைல்கல்லை அடையவும் உதவியது.

 

நிலவின் தென்துருவம் அருகே சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக மென்மையாக தரையிறங்கி இந்த கடினமான சாதனையை நிகழ்த்திய பெண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகளை இந்த அவை அங்கீகரித்துப் பாராட்டுகிறது. இந்த சாதனை, மற்ற விண்வெளி பயணங்களுடன் சேர்ந்து, நீண்டகால பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.

 

********

(Release ID: 1959168)

 

ANU/SM/SMB/KRS



(Release ID: 1959233) Visitor Counter : 106


Read this release in: English , Urdu , Hindi