சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பழைய வாகனங்கள் உடைப்புக் (ஸ்கிராப்பிங்) கொள்கை
Posted On:
27 JUL 2023 3:32PM by PIB Chennai
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பழைய வாகன உடைப்புக் (ஸ்கிராப்பிங்) கொள்கையை உருவாக்கியுள்ளது, இது நாடு முழுவதும் பழைய, தகுதியற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் முறையை உள்ளடக்கியது. கொள்கையின் விதிகளை செயல்படுத்துவதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன:-
(1) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 653 (ஈ) தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் 25, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
(2) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 652 (ஈ) தானியங்கி சோதனை நிலையங்களை அங்கீகரித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 25, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
(3) 04.10.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 714 (ஈ) வாகனங்களின் பதிவு கட்டணம், தகுதி சோதனை கட்டணம் மற்றும் தகுதி சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த வழிவகுக்கிறது. இந்த அறிவிப்பு 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
(4) 05.10.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 720 (ஈ) "வைப்புச் சான்றிதழை" சமர்ப்பிப்பதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான மோட்டார் வாகன வரியில் சலுகையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
(5) 05.04.2022 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 272 (ஈ) மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 175 இன் படி பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையத்தின் மூலம் மட்டுமே மோட்டார் வாகனங்களின் கட்டாய தகுதியை வழங்குகிறது.
(i) 01 ஏப்ரல் 2023 முதல் அமுலுக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் / கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களுக்கு, மற்றும்
(ii) 01 ஜூன் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் நடுத்தர சரக்கு வாகனங்கள் / நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் (போக்குவரத்து).
(6) 13.09.2022 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 695 (ஈ) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 653 (ஈ) மூலம் முன்னர் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (வாகன ஸ்கிராப்பிங் வசதியின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகள், 2021 இல் திருத்தங்களை வழங்குகிறது.
(7) 31.10.2022 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 797 (ஈ) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 652 (ஈ) மூலம் முன்னர் வெளியிடப்பட்ட "தானியங்கி சோதனை நிலையங்களை அங்கீகரித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்" விதிகளில் திருத்தங்களை வழங்குகிறது.
(8) மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அவற்றின் துறைகள், உள்ளாட்சி (மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகள் அல்லது பஞ்சாயத்துகள்), மாநில போக்குவரத்து நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ள பிற தன்னாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படக்கூடாது என்று ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 29(ஈ) நாள் 16.01.2023 கூறுகிறது.
(9) ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 233(ஈ) நாள் 29.03.2023 கனரக சரக்கு வாகனங்கள் / கனரக பயணிகள் மோட்டார் வாகனங்கள், நடுத்தர சரக்கு வாகனங்கள் / நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் (போக்குவரத்து) தொடர்பாக தானியங்கி சோதனை நிலையம் மூலம் கட்டாய சோதனை செய்வதற்கான தேதியை 01 அக்டோபர் 2024 வரை நீட்டிக்க வழிவகுக்கிறது.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(Release ID: 1943317)