குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சமோலியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

Posted On: 19 JUL 2023 6:31PM by PIB Chennai

உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் இன்று நிகழ்ந்த மின்சாரம் தாக்கிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு மனோபலம் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

----

(Release ID: 1940788)

SM/KRS



(Release ID: 1940842) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Hindi , Punjabi