கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘அரசு இ-சந்தை மூலம் பொது கொள்முதல் ’ என்ற தலைப்பில் வெபினாருக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 19 MAY 2023 3:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையில், 'அரசு இ-சந்தை (ஜிஇஎம்) மூலம் பொது கொள்முதல்' என்ற தலைப்பில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம்  நேற்று ஒரு வெபினார் எனப்படும் இணையவழி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தது. அமைச்சகங்கள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பொது கொள்முதல் நடவடிக்கைகளை நியாயமான மற்றும் போட்டித்தன்மையுடன் எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு கம்ரான் ரிஸ்வி, வெபினாருக்குத் தலைமை வகித்து, ஜிஇஎம் மூலம் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை 100% உறுதி செய்வது பற்றி குறிப்பிட்டார்.

கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்கள் ஜிஇஎம்-மின் முக்கியப் பயனர்களாகும் என்று அவர் குறிப்பிட்டார். சிறந்த செயல்திறன், வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் ஏலதாரர்களிடையே அதிக நம்பிக்கையை ஜிஇஎம் எளிதாக்கியுள்ளது, இதன் விளைவாக சிறந்த போட்டி மற்றும் அதிக சேமிப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 2022-23 நிதியாண்டில், மொத்தம் ரூ. 6,744 கோடிக்கு  அமைச்சகம் கொள்முதல்  செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கனரக தொழில்துறை கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திருமதி. ஆர்த்தி பட்நாகர், செலவினத் துறை ஆலோசகர் திரு சஞ்சய் அகர்வால், பிஎச்இஎல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்  நைலின் ஷிங்கால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

******

AD/PKV/KRS


(Release ID: 1925553)
Read this release in: English , Urdu , Hindi