நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Posted On: 06 APR 2023 6:08PM by PIB Chennai

கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் பேசும் போது, “இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-ல் 25 அமர்வுகள் மொத்தமாக நடைபெற்றன. இடைப்பட்ட காலகட்டத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை, பிப்ரவரி 13-ம் தேதி முதல் மார்ச் 12 வரையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் மார்ச் 13-ம் தேதி அன்று மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமாக 10 அமர்வுகள் நடைபெற்றன.  2-வது பகுதியில் 2 அவைகளிலும் மொத்தமாக 15 அமர்வுகள் நடைபெற்றன. ஆகமொத்தத்தில் 25 அமர்வுகள் நடைபெற்றன. இந்த ஆண்டின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றினார்.” அதற்கு பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட் குறித்து இரு அவைகளிலும் பொது விவாதங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின. மாநிலங்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின, சில மசோதாக்கள் திரும்ப அனுப்பப்பட்டன. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் 34 சதவீதமும், மாநிலங்களவையில் 24 சதவீதமும் மேற்கொள்ளப்பட்டது”.

 

***

AP/GS/RJ/KPG



(Release ID: 1914414) Visitor Counter : 315


Read this release in: English , Urdu , Hindi