அணுசக்தி அமைச்சகம்
பத்து அணு உலைகளை அமைப்பதற்கு பெரிய அளவிலான ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு இன்று தெரிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
05 APR 2023 3:08PM by PIB Chennai
பத்து அணு உலைகளை அமைப்பதற்கு பெரிய அளவிலான ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு இன்று தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையை மக்களவையில் இன்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சமர்ப்பித்தார்.
கர்நாடகாவில் கைகா, ஹரியானாவில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தின் சட்கா, ராஜஸ்தானில் மஹி பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதனிடையே தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து நிசார் என்னும் புவி அறிவியல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் இன்று கூறினார்.
***
AP/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1913931)
आगंतुक पटल : 252