பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினப் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

प्रविष्टि तिथि: 17 MAR 2023 4:21PM by PIB Chennai

நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு ஆதரவு அளிப்பது, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, குடிநீர், திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மக்களின்  சமூகப் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த, நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

***

AP/GS/AG/KRS


(रिलीज़ आईडी: 1908063) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu