தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அதிகளவில் ஊதியம் பெறுவோர் ஓய்வூதியம் தொடர்பாக விண்ணப்பம் செய்வதற்கான தேதி மே 03 வரை நீட்டிப்பு

Posted On: 13 MAR 2023 9:51PM by PIB Chennai

2014 செப்டம்பர் 1-க்கு முன் ஓய்வு பெற்ற அதிகளவில் ஊதியம் பெற்றவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் ஓய்வூதியத்திற்கான விருப்பத்தை தெரிவிக்கலாம் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில், இது தொடர்பாக, கள அலுவலர்களுக்கு 29.12.2022, 05.01.2023 ஆகிய தேதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. 01.09.2014-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பம் குறித்து  ஊழியர் வருங்கால வைப்பு நிதி  நிறுவனத்தின் இணைய தளம் மூலமாக  03.03.2023 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊழியர்கள் மற்றும் தொழில் உரிமையாளர் சங்கங்கள், கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து  விண்ணப்பம் அளிக்கும் தேதியை 2023 மே 03 வரை அறக்கட்டளையின் மத்திய வாரிய தலைவர் நீடித்துள்ளார்.

***

(Release ID: 1906600)

SRI/SMB/RS/RR



(Release ID: 1906686) Visitor Counter : 378


Read this release in: English , Hindi