ஜவுளித்துறை அமைச்சகம்

2023-24 மத்திய நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கு

Posted On: 11 MAR 2023 9:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் ' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் உரையாற்றினார். இதுவரை இந்திய அரசின்  எந்தவொரு திட்டத்திலும் உள்ளடக்கப்படாத கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

பிரதமரின் சிறப்பு உரையைத் தொடர்ந்து (i) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான ஊக்கத் தொகைகள் உட்பட எளிதான  நிதிக்கான அணுகல், (ii) மேம்பட்ட திறன் பயிற்சி, நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல், (iii) சந்தைப்படுத்தல், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடனான இணைப்புகளுக்கான ஆதரவு  (iv) திட்டத்தின் கட்டமைப்பு, பயனாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் செயல்படுத்தல் குறித்த நான்கு அமர்வுகள் நடைபெற்றன. கட்டமைப்பு குழுவில் அந்தந்த துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கைவினைஞர்கள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இ-வணிகத் தளங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

 

'உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைப்புக்கான சந்தைப்படுத்தல் ஆதரவு' குறித்த மூன்றாவது  அமர்வு, ஜவுளி அமைச்சகத்தின் கைவினை மற்றும் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் திருமதி சுப்ராவால் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட திட்டத்தில் வழங்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான சந்தைப்படுத்தல் ஆதரவின் கட்டமைப்பில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது. கைவினைஞர்களுக்கான சந்தை வழிகளை மேம்படுத்துதல், பின்தங்கிய மற்றும் முன்னோக்கி இணைப்புகளை உருவாக்குதல், விளம்பரம், விளம்பரம், தரச் சான்றிதழ், கைவினைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தளவாடங்கள் ஆகியவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

நிறைவுக் கூட்டத்தில் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கங்கள் எவ்வாறு முடிவுகள் குறித்தான விவாதங்களுக்கு மதிப்பு சேர்க்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். பிற அமைச்சகம்/துறைகளில் இருக்கும் திட்டங்களுடன் பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன்   முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார். இந்த அமர்வில் துறைக்கான  அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, இணை அமைச்சர் மற்றும்  ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குறிப்பு: இது நிகழ்ச்சி குறித்த ஒரு தோராயமான பதிவு.

 

***

SRI/CJL/DL



(Release ID: 1906057) Visitor Counter : 135


Read this release in: English , Urdu